160. அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் கோயில்
இறைவன் சொர்ணபுரீஸ்வரர்
இறைவி சொர்ணாம்பிகை
தீர்த்தம் திரிசூல கங்கை
தல விருட்சம் வன்னி
பதிகம் திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருக்கடுவாய்க்கரைப்புதூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'ஆண்டான் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - குடவாசல் சாலையில் வலங்கைமான் கடந்து உள்ள சுமார் 12 கி.மீ. தொலைவு சென்று வலதுபுறம் செல்லும் ஆண்டார் கோயில் தெருவில் சுமார் 1 கி.மீ. தொலைவு சென்றால் இக்கோயிலை அடையலாம். வலங்கைமானிலிருந்து 4 கி.மீ. தொலைவு.
தலச்சிறப்பு

Kaduvaikaraiputhur Gopuram'கடுவாய்' என்ற ஆற்றின் கரையில் இருப்பதால் 'கடுவாய்க்கரைப்புத்தூர்' என்று வழங்கப்படுகிறது. இந்த ஆற்றின் தற்போதைய பெயர் குடமுருட்டி.

மூலவர் 'சொர்ணபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சொர்ணாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

முசுகுந்த சக்கரவர்த்தி, உரோமச முனிவர், காசியப முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com